search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழைத்தார் விலை உயர்வு"

    • பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்க ணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    கேரளா

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிக பட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3-க்கும் ஏலம் போனது.

    விலை உயர்வு

    இந்த நிலையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்ச மாக ரூ.350-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் விற்பனையானது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாவை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், வாழைத்தார்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
    • தற்போது பூக்கள் மற்றும் பழங்களின் விலை சற்று அதிகரித்து உள்ளது.

    கோவை,

    கேரளா மாநிலத்தில் நாளை ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டா டப்படுகிறது. கேரளா மட்டு மின்றி அதனையொட்டிய கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் ஏராள மான மலையாளிகள் வசித்து வருகின்றனர். அவர்கள் கடந்த ஒருவார மாக ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பெருமளவில் மலர்கள் மற்றும் வாழைத்தார்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் கோவை மாவட்டத்தில் தற்போது பூக்கள் மற்றும் பழங்களின் விலை சற்று அதிகரித்து உள்ளது.

    கோவை தடாகம் ரோட்டில் வாழைக்காய் மண்டி இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் விவசாயிகள் தோட்டத்தில் விளைந்த வாழைப்பழ தார்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். மேலும் சத்தியமங்கலம், கடலூர், குளித்தலை, கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும் பெருமளவில் வாழைத்தா ர்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், வாழைத்தார்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் கோவையில் வாழைத்தார்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.கோவை தடாகம் வாழைக்காய் மண்டியில் ஒரு கிலோ பழங்களின் விலை விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் நேற்றைய விலை): நேத்திரம் வாழைப்பழம்-55 (40), செவ்வாழை-60 (45), பூவம்பழம்-40 (25), கற்பூரவள்ளி-50 (30), கதலி-70 (50).

    கோவை ஆர்.எஸ்.புரம் மலர்ச்சந்தையிலும் பூக்களின் வரத்து குறைவு காரணமாக அவற்றின் விலை சற்று அதிகரித்து உள்ளது. அங்கு ஒரு கிலோ ஜாதி மல்லி ரூ.400-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல செவ்வந்தி ரூ.160, ரோஜா-ரூ.160 என்று விற்பனையாகிறது.

    கோவை பூ மார்க்கெட்டில் விற்பனையாகும் இதர பூக்களின் விலை விவரம் பின்வருமாறு (ஒரு கிலோ வுக்கு):- செண்டுமல்லி-50, சம்பங்கி-120, அரளி-100, மருது ஒரு கட்டு-10, வாடாமல்லி-80, துளசி ஒரு கட்டு-40, கோழிக்கொ ண்டை-100, தாமரைப்பூ ஒன்று-15, மரிக்கொழுந்து ஒரு கட்டு-20, முல்லை-400, சவுக்கு ஒரு கட்டு-50.

    கேரளாவில் ஓணம் பண்டிகை காரணமாக கோவை மாவட்டத்துக்கு பூக்கள் மற்றும் பழங்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் தான் மார்க்கெ ட்டுகளில் அவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டா ட்டத்துக்கு பிறகு தான் கோவையில் உள்ள மார்க்கெட்டுகளில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

    • பூவன் வாழை, பச்சநாடன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
    • பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    நாமக்கல்: 

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், ஜேடர் பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூவன் வாழை, பச்சநாடன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.வாழைத்தார் முதிர்ச்சி அடைந்ததும் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய வாழைத்தார்கள் வியாபாரிகள் நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.350-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும்,மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும் வாங்கிச் சென்றனர். நேற்று பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், பச்சநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.800-க்கும் விற்ப னையானது. வாழைத்தார் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது.

    ×